பல பொலிஸ் நிலையங்களில் கடமைகளைச் செய்வதற்கு வாகனங்கள் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 125 வாகனங்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
“பல பொலிஸ் நிலையங்களில் திருடர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை பிடிக்க வாகனங்கள் இல்லை. சில OICகள் ட்ரைஷாக்களில் பயணம் செய்கிறார்கள், எனவே நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம், ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.