‘தமிழ் கட்சிகள், TNA ஊடாக மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது’

401

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பங்குபற்றுதலுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here