follow the truth

follow the truth

February, 18, 2025
HomeTOP1வரலாற்று நகரமான பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்து வைப்பு

வரலாற்று நகரமான பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்து வைப்பு

Published on

துருக்கியின் பர்சாவுக்கான இலங்கையின் கௌரவ துணைத் தூதரக அலுவலகம், தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத் தலைவர் எஃப்கான் ஆலா, பர்சா மேயர் அலினூர் அக்தாஸ், பர்சாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பர்சா ஆளுநரகத்தின் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் பங்கேற்புடன் அதிகாரபூர்வமாக 2021 செப்டம்பர் 25 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

வரலாற்று நகரமான பர்சாவில் கௌரவ துணைத் தூதரகத்தைத் திறப்பதன் மூலம் துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்கனவே இருக்கும் நட்புறவு மற்றும் சகோதர உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் ஹசன் தெரிவித்தார். மக்கள் தொகையின் அடிப்படையில் பர்சா துருக்கியின் 4வது பெரிய நகரமாவதுடன், ஒட்டோமான் பேரரசு அதன் முதல் இராச்சியத்தை அமைத்ததன் பின்னர் செழித்து வளர்ந்த பகுதியாக பொருளாதாரத்தின் இரண்டாவது பெரிய பகுதியாகவும் கருதப்படுகின்றது. பர்சாவின் கௌரவ துணைத் தூதுவராக அதிகாரப்பூர்வமாக திரு. அஹ்மத் யில்டிஸை தூதுவர் நியமனம் செய்தார். தனது கருத்துகளின் போது, இலங்கைக்கான புதிய வர்த்தக வாய்ப்புக்கள், சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பர்சா பிராந்தியத்தில் இலங்கையை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை திரு. யில்டிஸ் உறுதியளித்தார்.

பர்சா பெருநகர நகராட்சி மேயர் அலினூர் அக்தாஸ், ஏகே கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஃப்கான் ஆலா, பர்சா பெருநகரத்தின் பிரதி ஆளுநர் ஆகியோர் இதன்போது உரையாற்றினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்டாலினின் எதிர்ப்பு.. ஆசிரியர் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு உடனடி கலந்துரையாடல்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான "சுபோதானி குழு அறிக்கை"க்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...

பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின்...

கிரிக்கெட் காரணமாக 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

கிரிக்கெட் காரணமாக 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் மோகம்...