follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுவாக்குப் பெட்டிகளை பழுது பார்க்கும் பணிகள் ஆரம்பம்

வாக்குப் பெட்டிகளை பழுது பார்க்கும் பணிகள் ஆரம்பம்

Published on

பழுதடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மர வாக்குப் பெட்டிகள் பழுதுபார்ப்பதற்காக அரசாங்கத் தொழிற்சாலையில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அனைத்து வாக்குப்பெட்டிகளையும் தயார் நிலையில் வைக்க ஆணையம் சமீபத்தில் முடிவு செய்தது.

சில வாக்குப்பெட்டிகள் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், பல பெட்டிகள் பூட்டுவதில் சிக்கல் இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள பல வாக்குப்பெட்டிகள் பழுதுபார்ப்பதற்காக கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தேர்தலின் போது வாக்காளர்களின் விரல்களுக்கு வண்ணம் பூசுவதற்கு பயன்படுத்தப்படும் பெயிண்ட் மற்றும் இதர பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...