follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகடும் மழை காரணமாக பதுளை ரயில் சேவைகள் நிறுத்தம்

கடும் மழை காரணமாக பதுளை ரயில் சேவைகள் நிறுத்தம்

Published on

கனமழை காரணமாக மலையக ரயில் பாதையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று (25) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர தபால் ரயில்களும், கோட்டையிலிருந்து காலை 9:45 மணிக்கு பதுளை நோக்கிச் செல்லும் ரயில் உட்பட பல ரயில்களும் மண்சரிவு காரணமாக இன்று (25) இரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, காலை 10:40க்கு கோட்டையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் புகையிரதமும், நள்ளிரவு 12:40 மணிக்கு ஹட்டனுக்குச் செல்லும் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் உலப்பனை, பிரிமத்தலாவ, கெலிஓயா, கம்பளை, பலான, பேராதனை மஹையாவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அநுராதபுரத்திலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் ரஜரட்ட ரஜின புகையிரதம் கணேவத்த மற்றும் நாகொல்லாகம புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...