follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகடும் மழை காரணமாக பதுளை ரயில் சேவைகள் நிறுத்தம்

கடும் மழை காரணமாக பதுளை ரயில் சேவைகள் நிறுத்தம்

Published on

கனமழை காரணமாக மலையக ரயில் பாதையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று (25) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர தபால் ரயில்களும், கோட்டையிலிருந்து காலை 9:45 மணிக்கு பதுளை நோக்கிச் செல்லும் ரயில் உட்பட பல ரயில்களும் மண்சரிவு காரணமாக இன்று (25) இரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, காலை 10:40க்கு கோட்டையிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் புகையிரதமும், நள்ளிரவு 12:40 மணிக்கு ஹட்டனுக்குச் செல்லும் புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் உலப்பனை, பிரிமத்தலாவ, கெலிஓயா, கம்பளை, பலான, பேராதனை மஹையாவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அநுராதபுரத்திலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் ரஜரட்ட ரஜின புகையிரதம் கணேவத்த மற்றும் நாகொல்லாகம புகையிரதப் பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாகப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...