follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்.."

“குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்..”

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட 670 வகையான பொருட்களில், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் இருப்பதாகவும், அதன்படி, மற்ற பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய, ஓடு இல்லாத தேங்காய்ப்பால், வெசாக் கூடைகள், காத்தாடிகள், மூங்கில் தொடர்பான பொருட்கள் உள்ளிட்டவை இன்னும் கிடைக்கின்றன. இவைகள் வரம்புகள் இன்றி இறக்குமதி செய்யப்படுவதா அல்லது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து ஒரு தேசமாக எழுந்து நிற்பதா என்பதை தீர்மானிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...