follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு"குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்.."

“குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்..”

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட 670 வகையான பொருட்களில், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் இருப்பதாகவும், அதன்படி, மற்ற பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய, ஓடு இல்லாத தேங்காய்ப்பால், வெசாக் கூடைகள், காத்தாடிகள், மூங்கில் தொடர்பான பொருட்கள் உள்ளிட்டவை இன்னும் கிடைக்கின்றன. இவைகள் வரம்புகள் இன்றி இறக்குமதி செய்யப்படுவதா அல்லது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து ஒரு தேசமாக எழுந்து நிற்பதா என்பதை தீர்மானிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...