follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்.."

“குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்..”

Published on

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட 670 வகையான பொருட்களில், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல பொருட்கள் இருப்பதாகவும், அதன்படி, மற்ற பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய, ஓடு இல்லாத தேங்காய்ப்பால், வெசாக் கூடைகள், காத்தாடிகள், மூங்கில் தொடர்பான பொருட்கள் உள்ளிட்டவை இன்னும் கிடைக்கின்றன. இவைகள் வரம்புகள் இன்றி இறக்குமதி செய்யப்படுவதா அல்லது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து ஒரு தேசமாக எழுந்து நிற்பதா என்பதை தீர்மானிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...