போட்டியின் போது பார்வையாளர்கள் கூடம் சரிந்ததில் 27 பேர் காயம்

350

எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடைப்பந்து போட்டியின் போது மைதானத்தில் பார்வையாளர்கள் சரிந் தில் சுமார் 27 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான தகவலை எகிப்து சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்களில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக எகிப்து சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அஷ்ரப் சோபியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here