follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுபெப்ரவரி முதல் ETF செலுத்துகை இணையவழியில் மாத்திரம்

பெப்ரவரி முதல் ETF செலுத்துகை இணையவழியில் மாத்திரம்

Published on

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் இணைய (ONLINE) வழியாக மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ETF) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் தொழில்தருநர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தல் மற்றும் மாதாந்திர அறிக்கைகளை சமர்ப்பித்தல் என்பவற்றை இணைய வழியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனூடாக பணியிடத்தில் இருந்து பங்களிப்புகளை இலகுவாக செலுத்த முடியும் எனவும், நிறுவனத்தினால் பங்களிப்புகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஊழியர்கள் உறுதிப்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...