follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுஅனைத்து வழக்குகளில் இருந்தும் திலினிக்கு பிணை

அனைத்து வழக்குகளில் இருந்தும் திலினிக்கு பிணை

Published on

திலினி பிரியமாலி தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததையடுத்து இன்று  சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திலினி பிரியமாலி நிதிக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் இருந்த போது, ​​இரண்டு தடவைகள் சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பில் சிறைச்சாலை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் அந்த வழக்கிற்கு பிணை வழங்க உத்தரவிட்டார்

திலினி பிரியமாலிக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான 08 சரீரப் பிணைகளும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சரீரப் பிணைகளும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...