அம்பேவெல பண்ணைக்கு 30 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

757

கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு விடுவிக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அம்பேவெல பண்ணையை அண்மித்துள்ள காணிகளை பசுக்களின் நாளாந்த மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்காக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

கறவை பசுக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here