follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமலிவு விலையில் முட்டை வாங்கிய அமைச்சர்

மலிவு விலையில் முட்டை வாங்கிய அமைச்சர்

Published on

55 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பத்தரமுல்லையில் மலிவான முட்டைப் பொதி ஒன்றை கொள்வனவு செய்தார்.

சந்தையில் முட்டையின் விலை 65 – 70 ரூபாவாக அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, 55 ரூபா விலையில் நுகர்வோருக்கு முட்டை விற்பனையை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய , கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகின.

10 லொறிகளில் 10 இடங்களில் 04 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இம்மாதம் 30ஆம் திகதி காலி மற்றும் கண்டி நகரப் பகுதிகளில் முட்டை விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...