follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுதேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்

Published on

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதுஎன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

இதேவேளை, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...