follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுவிவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி

விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி

Published on

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 08 பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கும் நடவடிக்கை இன்று   இடம்பெறவுள்ளது.

கடந்த பெரும்போக அறுவடையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 08 பில்லியன் ரூபா நிதி உதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 10,000 ரூபா மற்றும் 02 ஹெக்டேயர் வயல் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்காக 20,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முறை பெரும்போகத்தில் 08 இலட்சம் ஹெக்டேயரில் நெய்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தற்போது 760,000 இற்கும் அதிக ஹெக்டேயர் நிலப்பரப்பில் அறுவடை நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக விவசாய அமைச்சின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...