follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுமுட்டையினை 35 ரூபாய்க்கு விற்கத் தயார்

முட்டையினை 35 ரூபாய்க்கு விற்கத் தயார்

Published on

2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்று 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையை கொள்வனவு செய்ய முடியாத வறிய குடும்பங்களுக்கு இலவசமாக முட்டை வழங்குவதற்கும் சங்கம் தயாராக இருப்பதாக சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று (28) கொழும்பில் நான்கு இலட்சம் முட்டைகள் ஒரு முட்டை 55 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில்லறை சந்தையில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், நுகர்வோருக்கு மலிவான முட்டைகளை வழங்குவதற்காக முக்கிய நகரங்களில் முட்டைகளை விற்பனை செய்ய லாரிகளைப் பயன்படுத்த முட்டை உற்பத்தியாளர்கள் சமீபத்தில் முடிவு செய்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...