follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉள்நாடுஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வரவில்லை

ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வரவில்லை

Published on

ஜனாதிபதியிடமிருந்து இதுவரையில் தமக்கு அழைப்பு வரவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அழைப்பு வரும் பட்சத்தில் மின்கட்டண பிரச்சினை தொடர்பில் அவரிடம் விளக்குவதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விசேட உரை நிகழ்த்தினார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் நடத்தை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கடுமையான கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...