ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வரவில்லை

775

ஜனாதிபதியிடமிருந்து இதுவரையில் தமக்கு அழைப்பு வரவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அழைப்பு வரும் பட்சத்தில் மின்கட்டண பிரச்சினை தொடர்பில் அவரிடம் விளக்குவதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விசேட உரை நிகழ்த்தினார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் நடத்தை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கடுமையான கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here