follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடு"திருட்டை விட்டு, வாக்கெடுப்பை நடத்துங்கள்"

“திருட்டை விட்டு, வாக்கெடுப்பை நடத்துங்கள்”

Published on

உள்ளூராட்சி தேர்தலில் அலி – பொஹொட்டு கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்பதால் அரசாங்கம் வாக்கெடுப்பை ஒத்திவைக்க முயற்சிப்பதாகவும், ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்கட்சிகள் அதற்கு எதிரான ஜனநாயக நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை நீதிமன்றத்தில் கூறப்போவதாகவும், ஆனால் தேர்தலுக்கு ஆறேழு ஆயிரம் கோடி செலவாகும் என்றும் தெரிவித்த மத்துமபண்டார, அரசாங்கத்தில் சிலரை நிறுத்தினால் பணத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லை என்றார்.

மேலும், நாள்தோறும் அரசு பணம் அச்சிடுகிறது என்று கூறிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், ஜனநாயகத்தை மதித்து மக்கள் கருத்துக்கு பணிந்தால், பாசாங்கு இல்லாமல் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...