follow the truth

follow the truth

June, 15, 2025
HomeTOP1தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர், தபால் மா அதிபர், அரசாங்க செய்தியாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...