துருக்கி குடியரசின் தூதுவர், மேதகு செமிஹ் லுட்ஃபு துர்குட், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (13) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இலங்கைக்கும் துருக்கிக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, இரு பிரமுகர்களும் கலந்துரையாடினர்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பரஸ்பர ஆர்வத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்பு உறவுகளை மேலும் வளர்ப்பதற்கான துருக்கியின் உறுதிப்பாட்டை தூதுவர் மீண்டும் வலியுறுத்தினார்.