follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகொவிட் பற்றி சுகாதார துறை மீண்டும் எச்சரிக்கை

கொவிட் பற்றி சுகாதார துறை மீண்டும் எச்சரிக்கை

Published on

கொவிட்-19 இன் உலகளாவிய அபாயம் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவில் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் கொவிட் நோயைக் கட்டுப்படுத்த மீண்டும் நிபந்தனைகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மேலும் விளக்கமளிக்கும் கலாநிதி ஹேமந்த ஹேரத்,

“நோய் நமக்கு ஒரு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை என்றாலும், நோய் தீரவில்லை என்பதால், நோய் மீண்டும் வரும் அபாயம் முற்றாக நீங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதைத் தவிர்க்க நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், அதே ஆரோக்கிய பழக்கங்களைச் செய்வதுதான்.”

இலங்கையில் நாளாந்தம் சுமார் 10 கொவிட் நோயாளிகள் பதிவாகுவதாகவும், ஆனால் சந்தேகத்திற்குரிய அனைத்து நோயாளிகளையும் பரிசோதிக்காததால், சமூகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகள் இருக்கலாம் என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் இன்றைய நாட்களில் பரவி வரும் இன்புளுவன்சா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...