follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉள்நாடுபோலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் - தம்பதி கைது

போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் – தம்பதி கைது

Published on

போலந்து மற்றும் துருக்கியில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.

திம்பிரிகஸ்யாய பகுதியில் இந்த போலி வேலை வாய்ப்பு நிறுவனம் இயங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், போலந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் தொழில் வழங்குவதாக கூறி ஒருவரிடம் 555,000 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அந்த இடத்தில் இருந்து 11 கடவுச்சீட்டுக்கள், 4 பில் புத்தகங்கள், 50 பிரச்சார துண்டு பிரசுரங்கள் உட்பட பல ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...