follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்ட தீர்மானம்

நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்ட தீர்மானம்

Published on

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத்தை ஜனவரி 5 ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழு கூட்டத்தின் போது ஜனவரி 5 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை நாடாளுமன்ற விடுமுறைக் காலம் நீடிக்கப்படுவதை கருத்திற்கொண்டு, 5 ஆம் திகதியே நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள வளாகங்களை மீள பெறுவதற்கான சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும் வாக்கெடுப்பும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டிய மதுவரித் திணைக்களம்

மதுவரித் திணைக்களம் 6 மாதங்களில் 120.5 பில்லியன் ரூபாய்கள் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை மதுவரித்...

கொழும்பு – அவிசாவளை வீதியில் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவித்தல்

கொழும்பு - அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று (04) மாலை 4 மணி முதல் சுமார் 3 மணி...

தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்திக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பன இணைந்து ஏற்பாடு செய்த தேசிய ஆராய்ச்சி மற்றும்...