follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉள்நாடுமுட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் பேக்கரி உரிமையாளர்கள்

முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் பேக்கரி உரிமையாளர்கள்

Published on

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன நேற்று (31) செய்தியாளர் மாநாட்டை நடத்தி அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தமது சங்கத்திற்கு அனுமதி வழங்கினால், 30/= முதல் 35/= ரூபாய் வரையிலான விலையில் முட்டைகளை வழங்க முடியும் என திரு.என்.கே.ஜயவர்தன வலியுறுத்தினார்.

முட்டையின் விலை சுமார் 70 ரூபாவாக அதிகரித்துள்ளதால், பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளையும் பேக்கரிகள் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஜயவர்தன தெரிவித்தார்.

லொறிகளில் இருந்து கொண்டு வரப்படும் முட்டையை ரூ.55/= க்கு விற்கும் நாடகம் நிறுத்தப்பட வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஒரு பேனாவால் முட்டை இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்க முடியும் என்றும் ஜயவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...