follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉள்நாடு"கட் இஷார" கைது

“கட் இஷார” கைது

Published on

ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் வெட்டி வாயில் சுட்டுவிட்டு கடுவெல வெலிப்பில்லவ பிரதேசத்தில் விட்டுச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த “கட் இஷார” என்ற நபர் கொலன்னாவ, நாகஹமுல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருடன் 5 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், கார், வாள், மன்னா கத்தி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மாதம் 26ஆம் திகதி கடவத்தை மேல் பையன்வில மங்கட வீதியைச் சேர்ந்த ஹர்ஷ மதுஷன் ஜானக என்ற அஞ்சு என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கொலன்னாவ, நாகஹமுல்ல வீதி பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கடுவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...