follow the truth

follow the truth

August, 2, 2025
Homeஉள்நாடு"கட் இஷார" கைது

“கட் இஷார” கைது

Published on

ஒருவரை கடத்திச் சென்று கூரிய ஆயுதங்களால் வெட்டி வாயில் சுட்டுவிட்டு கடுவெல வெலிப்பில்லவ பிரதேசத்தில் விட்டுச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த “கட் இஷார” என்ற நபர் கொலன்னாவ, நாகஹமுல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருடன் 5 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், கார், வாள், மன்னா கத்தி மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மாதம் 26ஆம் திகதி கடவத்தை மேல் பையன்வில மங்கட வீதியைச் சேர்ந்த ஹர்ஷ மதுஷன் ஜானக என்ற அஞ்சு என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கொலன்னாவ, நாகஹமுல்ல வீதி பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கடுவெல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படைத் தளபதி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...