follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP3டீசல் விலை குறைப்பினால் பேரூந்து கட்டணங்களும் குறையும் சாத்தியம்

டீசல் விலை குறைப்பினால் பேரூந்து கட்டணங்களும் குறையும் சாத்தியம்

Published on

நேற்று (02) நள்ளிரவு டீசல் விலை குறைவினால் எதிர்காலத்தில் பேரூந்து கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானம் 02 நாட்களில் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

டெய்லி சிலோன் செய்திப் பிரிவு இது தொடர்பில் வினவிய போது, ​​இது தொடர்பான தீர்மானம் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நாங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கட்டணங்களை திருத்துவது சாத்தியமா என்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டோ தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போதைய எரிபொருள், உதிரிபாகங்கள் மற்றும் ஏனைய சேவைகளின் விலையேற்றம் காரணமாக தாங்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதற்காக அரசாங்கத்திடம் நிவாரணம் கோருவதாகவும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் என்.எ.கே.ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...