follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP3மது, சிகரெட் விலை உயர்வு

மது, சிகரெட் விலை உயர்வு

Published on

இன்று (03) நள்ளிரவு முதல் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு போத்தல் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மதுபான போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 1,050 ரூபா வரி 1,256 ரூபாவாகவும், 1,121 ரூபா வரி 1,344 ரூபாவாகவும், 1,309 ரூபா வரி 1,576 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பீர் போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 103 ரூபா வரி 124 ரூபாவாகவும் 194 ரூபா வரி 233 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிகரெட் வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை 105 ரூபாவாகும்.

85 ரூபாயாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 100 ரூபாயாக இருக்கும்.

ரூ.70க்கு விற்கப்பட்ட சிகரெட்டின் புதிய விலை ரூ.80 ஆக உயரும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...