follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசேபால அமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை

சேபால அமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கை

Published on

யூடியூபர் சேபால் அமரசிங்கவுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தலதா வஹன்சே (பௌத்தர்களின் புனிதம்) அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ;

“ஸ்ரீ தலதா வஹன்சே என்பது இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல, முழு உலக பௌத்த மக்களின் அடையாளமாகும், எனவே அதனை அவமதிக்க இவ்வுலகில் எவருக்கும் உரிமை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேபால் அமரசிங்க மிகவும் வெட்கக்கேடான வகையில் ஸ்ரீ தலதா வஹன்சே இனை
சமூக ஊடகங்களினூடாக அவமானப்படுத்தினார். இன்று கௌரவ மகா சங்கரத்தினரும் பௌத்த மக்களாகிய நாமும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இந்நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் சட்ட விதி 290 கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இந்த நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயலும் இவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோம் என அரசாங்கம் என்ற ரீதியில் தெளிவாக கூறுகின்றோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...