follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஉள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் பொது அரசாங்கம் அமைக்கப்படும்

உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் பொது அரசாங்கம் அமைக்கப்படும்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் இரண்டு மாதங்களில் பொது அரசாங்கம் அமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கலாவெவ பிரதேச சபை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க அதிகாரத்தைப் பெறுவதற்கு மட்டுமன்றி அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும் உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டபடி நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யாவிட்டால், போராட வேண்டும் அல்லது வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மூன்று மாதங்களில் மத்திய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் அதன் பின்னர் அனைவரும் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...