follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉலகம்எட்டு பேரினை பலியெடுத்த விவாகரத்து வழக்கு

எட்டு பேரினை பலியெடுத்த விவாகரத்து வழக்கு

Published on

நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் ஏனோக் சிட்டி பகுதியில் இருந்து இந்த முக்கியமான செய்தி பதிவாகியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு அவரது 40 வயது மனைவி விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கே காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற பின்னர், 42 வயதுடைய நபரும் அந்த இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான சந்தேக நபர் பெண் மற்றும் ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார்.

உயிரிழந்த சிறுவர்கள் 4 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் அவரது மனைவியின் தாயாரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்பெயினில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீ விபத்து

ஸ்பெயினில் உள்ள ஒரு விமான நிலையமொன்றில் புறப்படத்த தயாரக இருந்த ரியன் ஏர் என்ற விமானத்தில் ஏற்பட்ட தீ...

டெக்சாஸில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக...

முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்...