follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுஅனைத்து பழ வகைகளினதும் விலை உயர்வு

அனைத்து பழ வகைகளினதும் விலை உயர்வு

Published on

பழச் சந்தையில் நெல்லி கிலோ ஒன்றின் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை கிலோ ஒன்றின் விலை 1800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

தவிர, அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 600 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் 100 கிராம் ஆரஞ்சு பழத்தின் விலை 120 ரூபாவாகவும், 100 கிராம் பச்சை ஆப்பிள் பழத்தின் விலை 180 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு ஆரஞ்சு பழத்தின் விலை 600 ரூபாய். ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ பெல்லி 500 ரூபாவாகவும் உள்ளது. ஒரு கிலோ கொய்யாவின் விலை 700 ரூபாய்.

இறக்குமதிச் செலவு அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்துக் கட்டண உயர்வினால் உள்ளூர் பழங்களின் விலை அதிகரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பழங்களின் விலை உயர்வால் பழங்கள் விற்பனை குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling Day) முன்னிட்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்காக...

29 வீத மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய...