follow the truth

follow the truth

July, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமீண்டும் பொதுஜன பெரமுனவில் ஜி.எல்.பீரிஸ்?

மீண்டும் பொதுஜன பெரமுனவில் ஜி.எல்.பீரிஸ்?

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பண்டார, எம்.பி. பீரிஸ் மீண்டும் தமது கட்சிக்கு திரும்புவார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நீடிப்பார் என்றும் தாம் நம்புவதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உட்பட சுமார் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்வார் என தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...