தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் தாதியர்கள்

519

தாதியர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு செயற்படாததற்கு எதிராக தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு பொது நூலகத்தில் இன்று (8) மாபெரும் தாதியர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி மடிவத்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

தாதியர் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 47,000 தாதியர்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பதில் வழங்காமை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது, தாதியர்களின் எண்ணிக்கை போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. 60 வயதை எட்டியவுடன் ஓய்வு பெறும் அதிகாரிகள் மிகவும் அனுபவம் கொண்ட செவிலியர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

வங்கிக் கடன் தவணை அதிகரிப்பு, மின்கட்டணம் அதிகரிப்பு, நியாயமற்ற சம்பளக் குறைப்பு, இத்தகைய சூழ்நிலையில் பணிபுரியும் செவிலியர்களின் பதவி உயர்வு தாமதம் போன்ற காரணங்களால் அவர்களின் துன்பம் மேலும் அதிகரித்து அப்பாவி நோயாளிகள், செவிலியர்களும் அவதிப்படுகின்றதாகவும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here