follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடு“நாட்டு முட்டைகளை வெளிச் சந்தையில் விற்க முடியாது”

“நாட்டு முட்டைகளை வெளிச் சந்தையில் விற்க முடியாது”

Published on

தற்போதைய வர்த்தக அமைச்சரின் தலையீட்டினால் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் முட்டைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.

முட்டைகளை இறக்குமதி செய்யும்போது குளிர்சாதன பெட்டிகளில் முட்டைகளை கொண்டு வர வேண்டும் என்றும், உணவுப் போக்குவரத்தில் இதுவே உலக சட்டம் என்றும், 6 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் முட்டைகளை 72 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

திறந்த சந்தையில் முட்டைகளை விற்க முடியாது, அதற்கு குளிர்சாதன பெட்டிகளும் இருக்க வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

72 மணி நேரத்திற்கு மேல் விற்கப்படும் முட்டை 50% கெட்டுப்போன முட்டை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறான நிலைமைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை இராணுவத்திற்கோ அல்லது கேக் உற்பத்தி செய்யும் பேக்கரிகளுக்கோ வழங்க முடியும் என வலியுறுத்திய தலைவர், தாம் அறிந்த வரையில் முதற்கட்டமாக கொண்டுவரப்படும் முட்டையின் அளவு இந்த நாட்டில் இரண்டு நாட்களுக்கு முட்டை உற்பத்தியாகும் எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டை தற்போது இராணுவம் மற்றும் பேக்கரிகளுக்கு செல்வதால் சந்தையில் முட்டையின் விலையில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் மொத்த விலையை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை பகுதியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு - பொரளை பகுதியில், நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை...

கஹவத்த துப்பாக்கிச்சூடு சம்பவம்: பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

கஹவத்த பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், தேசிய பொலிஸ் ஆணைக்குழு...

வாவியில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பின் வாகரை பகுதியில் உள்ள பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி...