follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடு'கஞ்சா' கதை குறித்து பிரதி சபாநாயகர் விளக்கம்

‘கஞ்சா’ கதை குறித்து பிரதி சபாநாயகர் விளக்கம்

Published on

மத்தள பிரதேசத்தில் தமக்கு சொந்தமான காணியில் வாடகை அடிப்படையில் கஞ்சா பயிர் செய்கை செய்து வருவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தனது அரசியல் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிற்கு சொந்தமான காணியை வாடகை அடிப்படையில் பெற்று கஞ்சா கூடம் நடத்தி வந்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், மத்தள பிரதேசத்தில் உரிய காணியை பிரதி சபாநாயகரிடம் இருந்து மரக்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுவதாகக் கூறி வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த காணியின் உரிமை குறித்து கதிர்காமம் பொலிஸாரிடம் நாம் வினவியதுடன், தொலைபேசிக்கு பதிலளித்த அதிகாரி, பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி வழக்கு ஒன்றிற்காக பொலிஸாரை விட்டுச் சென்றுள்ளதாகவும், அதனால் உரிய தகவல்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...