ரெஜினோல்ட் குரேயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை

1722

அரசியல் சந்திப்பின் போது திடீரென மாரடைப்பால் மரணமடைந்த மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரேயின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை செய்யுமாறு அவரது மனைவி சந்திரிகா பிரியங்கனி குரே கோரிக்கை விடுத்துள்ளார்.

களுத்துறை போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஏ.குமசாரு முன்னிலையில் இன்று (13) இடம்பெற்ற மரண விசாரணையின் போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

ரெஜினோல்ட் குரேயின் முன்னாள் தனிச் செயலாளர் ஜே.எம். சோமேசிறியின் சாட்சியத்தின் பின்னர், அவர் அவ்வாறு கோரினார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் கெவிது குமாரதுங்க உட்பட நால்வருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பரிமாற்றத்தின் பின்னரே ரெஜினோல்ட் குரே நோய்வாய்ப்பட்டதாக ஜே.எம். சோமேசிறி சாட்சியமளித்துள்ளார்.

இதன்படி, களுத்துறை போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி எஸ்.ஏ.குமசாரு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன், களுத்துறை போதனா வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீஅந்த அமரரத்ன தலைமையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here