follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுநிலக்கரி விலை அதிகரிப்பால் இலங்கைக்கு பாதகமான நிலைமை

நிலக்கரி விலை அதிகரிப்பால் இலங்கைக்கு பாதகமான நிலைமை

Published on

உலக சந்தையில் நிலக்கரியின் விலை மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவித்த அவர், எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்த சில நாடுகள் மீண்டும் நிலக்கரிக்கு மாறியதன் மூலம் அதற்கான தேவை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் காரணமாக உலக சந்தையில் நிலக்கரியின் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வருடத்துக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 33 நிலக்கரி கப்பல்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி இலங்கைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், உலக சந்தையில் அதீதமாக அதிகரித்துள்ள நிலக்கரியின் விலை எதிர்காலத்தில் படிப்படியாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...