வாக்கெடுப்பை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக கோரிய போதிலும், சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சுமார் 50 உறுப்பினர்களுடன் வாக்கெடுப்பை ஒத்திவைக்க பேசியதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
“தேர்தல் வேண்டும் என்று ஒருபுறம் சொல்கிறார்கள்.. அவர்களைப் பார்த்ததும் எங்கள் பின்னால் வந்து கூச்சல் போட்டு தேர்தலை தள்ளிப்போட்டாலும் பரவாயில்லை என்று சொல்கிறார்கள். அதுதான் உண்மை கதை. அரசாங்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் இதைத் தள்ளிப் போடப் பேசியிருக்கிறார்கள். இந்த ஊழல் இரட்டை வேட அரசியலை நிறுத்துங்கள்”