மைத்திரிக்காக 10 கோடியை சேர்க்க வீதியில் உண்டியல் உருட்டல்

2105

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக கலைஞர் சுதத்த திலகசிறி நேற்று (17) கொழும்பு கோட்டையில் உண்டியல்களை உருட்டி பணம் சேகரித்தார்.

இதன்போது, 1810 ரூபா பணம் திரட்டப்பட்டு, அந்தத் தொகையை முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்தார்.

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்தும் அளவிற்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி நேற்றைய பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here