“ரணில் ராஜபக்ஷ மருந்துகள் இனியும் வேண்டாம்”

1098

உள்ளூராட்சி தேர்தலில் முழுமையாக தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியினை பெரும் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்திருந்தார்.

“.. தேசிய மக்கள் சக்தி சார்பில் பதுளை மாவட்டத்தில் வேட்புமனுக்களை நாம் தாக்கல் செய்தோம். உள்ளூராட்சி மன்றங்கள் 18 உள்ளன. அதில் 14 இற்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்தோம். நாம் அமோக வெற்றியினை பெறுவோம் என நம்புகிறோம். ஏனென்றால் ஏனைய கட்சிகளுக்கு தேர்தலில் நிற்கவே ஆளில்லை. அவர்கள் இன்னும் தேடுகிறார்கள். எங்களுக்கு நல்லதொரு வேட்பாளர்கள் குழு உள்ளது.

துஷ்டமான ஆட்சியினை கவிழ்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் உள்ளூராட்சி மன்றங்களை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவோம். அரசாங்கம் இப்போதே தோல்வியினை கண்டு அஞ்சி விட்டார்கள். பலவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள் இறுதியில் எதுவுமே கைகூடவில்லை. எப்படியிருந்தாலும் நாம் அரசுக்கு சொல்வது வெள்ளைக் கொடிகளை தயார்படுத்திக் கொள்ளுங்கள். 75 வருட துஷ்டமான அரசியலை முடிவுக்கு கொண்டுவந்து ஜனநாயக ஆட்சி முறையைக் கொண்டு வருவோம். வீழ்ந்துள்ள எங்கள் தாய்நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம்..”

இதன்போது ‘உங்களுக்கு மருந்து தேவையா? தேர்தல் தேவையா?’ என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளிக்கையில்; “இதுவரை காலமும் ரணிலின் மருந்துகளையும் ராஜபக்சர்களின் மருந்துகளையும் உண்டோம். இனியும் போலி வைத்தியர்களின் போலி மருந்துகள் வேண்டாம் ..” எனவும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here