பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) பதவி விலகக் கோரி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மாபெரும் போராட்டம் தொடங்கியுள்ளது.
பிரதம அமைச்சர் தலைமையிலான சோசலிச அரசாங்கம் அரசியலமைப்பை கீழறுப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதமர் துரோகி என்றும் ஸ்பெயின் நாட்டு கொடிகளை ஏந்தியவாறும் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பழமைவாத எதிர்க்கட்சி, மத்திய-வலது கட்சி உட்பட பல அரசியல் குழுக்கள் 30,000 க்கும் மேற்பட்ட மக்களின் பங்கேற்புடன் போராட்டங்களில் இணைந்துள்ளன.