நுவரெலியா நானுஓயா ரதல்ல பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் கைதான பேரூந்து சாரதியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். தேர்ஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த 43 மாணவர்கள் உட்பட 53 பேர் காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்