follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுமுட்டை - கட்டுப்பாட்டு விலையினை தாண்டினால் அபராதம்

முட்டை – கட்டுப்பாட்டு விலையினை தாண்டினால் அபராதம்

Published on

கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று (22) பல கடைகள் சோதனையிடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் சாதாரண கடைகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்ட கடைகளுக்குச் 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல வலியுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், முட்டை விலை உயர்வைக் கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய வர்த்தமானி அறிவித்தலை கடந்த 20ஆம் திகதி வெளியிட்டது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் வர்த்தமானி அறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, முட்டை விற்பனையை முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் நிராகரித்தன.

அதன்படி, கட்டுப்பாட்டு விலையை தாண்டி, 55 ரூபாய் என்ற வரம்பை தாண்டி, பல்வேறு விலைகளில் முட்டை எப்படி விற்கப்படுகிறது என்பதை இன்று காண முடிந்தது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கொழும்பை சூழவுள்ள கொட்டாவ பின்ஹேன உள்ளிட்ட சில பிரதேசங்களில் மாத்திரமே முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்...

தலாவாக்கலை பகுதியில் காரொன்று விபத்து

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்திற்கு அதிவேகமாக பயணித்த கார் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி மண்மேடு ஒன்றில்...