follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுமுட்டை - கட்டுப்பாட்டு விலையினை தாண்டினால் அபராதம்

முட்டை – கட்டுப்பாட்டு விலையினை தாண்டினால் அபராதம்

Published on

கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று (22) பல கடைகள் சோதனையிடப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் சாதாரண கடைகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்ட கடைகளுக்குச் 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியல்ல வலியுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், முட்டை விலை உயர்வைக் கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார அதிகாரசபை புதிய வர்த்தமானி அறிவித்தலை கடந்த 20ஆம் திகதி வெளியிட்டது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் வர்த்தமானி அறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி அறிவிப்பின்படி, முட்டை விற்பனையை முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் நிராகரித்தன.

அதன்படி, கட்டுப்பாட்டு விலையை தாண்டி, 55 ரூபாய் என்ற வரம்பை தாண்டி, பல்வேறு விலைகளில் முட்டை எப்படி விற்கப்படுகிறது என்பதை இன்று காண முடிந்தது.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், கொழும்பை சூழவுள்ள கொட்டாவ பின்ஹேன உள்ளிட்ட சில பிரதேசங்களில் மாத்திரமே முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...