இலக்கியப் படைப்புகளின் pdf பிரதிகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து படிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு சில எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் விதர்ஷன பதிப்பக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜனக இனிமங்கட டெய்லி சிலோன் செய்திப் பிரிவில் தெரிவித்தார்.
உலக அளவில் pdf பிரதிகளின் வாசிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், அண்மையில் புக்கர் விருதை வென்ற ஷெஹான் கருணாதிலக எழுதிய seven moons of Maali almeida என்ற புத்தகத்தின் 06 pdf பிரதிகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்காலத்தில் முகநூலில் நாவல் பகுதிகளை எழுதும் எழுத்தாளர்கள் பலர் இருப்பதாகவும், பின்னர் அவற்றை படைப்புகளாக வெளியிட்டு மீண்டும் pdf ஆக விற்பனை செய்வதாகவும் ஜனக இனிமங்கட தெரிவித்தார்.
pdf என்பது இலங்கையில் மட்டுமன்றி உலகிலும் இதுபோன்ற வியாபார நடவடிக்கைகள் உண்டு எனக் கூறிய ஜனக இனிமங்கட, அதனைப் கண்டுகொள்ளது இருப்பதே சிறந்தது என்றும் அதற்கு எதிராக ஒழுங்கமைத்து அது குறித்த செயற்பாட்டில் தேவையற்ற கவனம் செலுத்துவது வீணானது எனவும் தெரிவித்திருந்தார்.
பதிப்பகத் துறைக்கு புத்தக சேகரிப்பாளர்கள் முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டிய விதர்ஷன பதிப்பக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், சமுதாயத்தின் உயிர்ச்சக்திக்கு வாசகர்களும், பதிப்பகத் துறையின் வாழ்வுக்கு புத்தக சேகரிப்பாளர்களும் முக்கியம் என்று கூறினார்.