follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஅமைச்சரவை உத்தரவுக்கு எதிராக ரிட் மனு

அமைச்சரவை உத்தரவுக்கு எதிராக ரிட் மனு

Published on

இலங்கை மின்சார சபையுடன் இணைந்து மின்சார கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை வழங்கிய உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட குழு இந்த மனுவை சமர்ப்பித்துள்ளது.

இலங்கை மின்சார சபை, மின்சார அமைச்சர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், அதனை இலங்கை மின்சார சபையுடன் மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அமைச்சர்கள் சபை உத்தரவிட்டுள்ளதாகவும் மனுதாரர் கோரியுள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழு என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அவ்வாறான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி மின்கட்டண உயர்வு தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் செல்லுபடியாகாத உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...