follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP3"வரிகளை நீக்கினால், IMF உதவிகள் கிடைக்காது.."

“வரிகளை நீக்கினால், IMF உதவிகள் கிடைக்காது..”

Published on

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் நீக்கப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) தெரிவித்தார்.

மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாகவும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் 100,000 ரூபா வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வர முடியாவிட்டால் இரண்டு வாரங்களுக்கு மேல் நாடு இயங்க முடியாது எனவும், அதற்கான வழியை வழங்குபவர்களுக்கு செவிசாய்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...