follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவைத்தியர் ஷாபியின் மனு குறித்து நீதிமன்ற உத்தரவு

வைத்தியர் ஷாபியின் மனு குறித்து நீதிமன்ற உத்தரவு

Published on

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி கூடி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (25) பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது.

இந்த மனுவை வரும் 16ம் திகதி பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மலட்டுத்தன்மைக்கு அறுவை சிகிச்சை மற்றும் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஷாபி கைது செய்யப்பட்டதாக பொலிசார் அறிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், தம்மைக் கைது செய்தமைக்கான நியாயமான காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர் வைத்தியர், பொய்யான மற்றும் ஆதாரமற்ற உண்மைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...