ஊழியர்களுக்கு வாரந்தோறும் ஊதியம் வழங்க யோசனை

1501

வாரந்தோறும் மாதாந்த சம்பளம் வழங்குவதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனை ஒன்றை முன்வைக்கிறார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை கண்டுபிடிக்கும் சவாலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியதில்லை.

மேலும் சம்பளம் வழங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடனில் சிக்காமல் இருப்பார்கள் என்றார்.

“.. வாரச் சம்பளம் வாங்கும் போது அந்த வாரச் செலவுகள்தான் இருக்கும். கடைசி வாரத்தில் பணம் செலவழிச்சு, கடன் வாங்க வேண்டியதில்லை. மேலும், பெரிய தொகையைக் கண்டுபிடிக்க அரசாங்கமோ, தனியாரோ சிக்கத் தேவையும் இல்லை. ஒரே நேரத்தில் பணம். கூலி செய்பவர் மற்றும் கூலி கொடுப்பவர் இருவரும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருந்து விடுபடுவார்கள். வாரம் வாரம் கூலி கொடுப்பது ஒரு நிம்மதி. மேலும், உலகின் பல நாடுகளில், வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் செலுத்தப்படுகிறது..” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here