follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP1ஜனகவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஜனகவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (29) தெரிவித்தார்.

ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கு பல வழிகள் இருப்பதாகவும் அதற்கு பொருத்தமான முறையே பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத்தின் முதலாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனக ரத்நாயக்க அந்த பதவியில் பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என தெரிவித்த அமைச்சர், அரச நிறுவனமொன்றில் பணியாற்றுவதற்கு அவருக்கு தகுதியில்லை என பாராளுமன்ற குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொமர்ஷல் வங்கியின் தலைவர் பதவிக்கு ஜனக ரத்நாயக்க விண்ணப்பித்த போது, ​​அவர் அதற்குத் தகுதியற்றவர் என மத்திய வங்கி பரிந்துரைத்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...